பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்… எதற்காக? வெளியான தகவல்!

913

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஓரினச்சேர்க்கையாளர்ககின் பெருமைமிகு நடைபயணம் நிகழ்வுக்கு அரசு அனுமதி அளித்திருக்காத நிலையில், அந்த நடைபயணத்தை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை 3,000 வரையான ஓரினச்சேர்க்கையாளர் பாரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

2020-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இது 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் ஆகும். ஆனால் இம்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் கொவிட் 19 வைரஸ் காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.