வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ராசியினர் யார் தெரியுமா?

1040

நாம் நீண்ட ஆயுள் வாழ வேண்டுமென்றால் அப்போது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி கண்டிப்பாக தேவை. மகிழ்ச்சி நம் வாழ்வில் புதுமைகளைக் கொண்டு வருகிறது. ‘மகிழ்ச்சி நமக்குள் இருக்கிறது’ என்ற வார்த்தைகளில் அந்த மகிழ்ச்சியை நம்மில் கண்டுபிடிக்க உதவுகிறது. ஆனால் வேலையின் அழுத்தங்கள், சூழ்நிலை காரணமாக நாம் மகிழ்ச்சியைப் பறிக்கும் விஷயமாக இருக்கிறது.

இந்த சூழலால் மகிழ்ச்சியான நிலையை கூட சரியாக அனுபவிக்க முடியாத சூழல் உள்ளது. ஜோதிடத்தின் படி, இந்த ஆறு ராசிகள் மிகப்பெரிய நேர்மறை ஆற்றலைக் கொண்டுள்ளன. மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் மக்கள் என்றால் இவர்கள் தான் முன்னணியில் இருப்பார்கள்.

மேஷம்

தனது நமிப்பிக்கை, திறமைமீது அதிக நம்பிக்கை வைக்கக் கூடிய ராசி. இவர்கள் கவலையற்ற அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள், இவர்கள் மற்றவர்களைப் பற்றி குறைவாகவே அக்கறை கொண்டிருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். இக்கட்டான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். யார் எப்படி இருந்தாலும் தன் சொந்த மகிழ்ச்சி பறிபோய் விடக் கூடாது என நினைப்பார்கள். விருந்துகள், வேடிக்கை நிகழ்ச்சி என சென்று மகிழ விரும்புவார்கள்.

ரிஷபம்


ஒருபோதும் எதிர்மறை உணர்வுகளைப் பற்றியோ, நிகழ்வுகளைப் பற்றியோ கவலைப்படாமல் எப்போதும் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கத் தயாராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை விட தாராளமானவர்கள். தான் மட்டுமல்லாமல், தன்னை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள். அதனால் தன் சுற்றத்தாருக்கு எந்தவொரு பிரச்சினையிலும் உதவ தயாராக இருப்பார்கள்.

நீங்கள் சுய அன்பு மற்றும் சமூக அன்பைப் பற்றி அறிய விரும்பினால், ரிஷப ராசியை விட வேறு யாரும் உதாரணமாக இருக்க முடியாது. எனவே மகிழ்ச்சியாக இருக்க விரும்பக் கூடிய ரிஷபம் தன்னை நேசிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவுவார்கள்.

மிதுனம்

இவ் ராசியின் மனோபாவம், இயல்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்பது தான். அவளுடன் இருப்பதை விட வேறு யாரிடமும் அவ்வளவு உற்சாகத்தை எதிர்பார்க்க முடியாது. சிறிய விஷயங்களானாலும் அதில் மகிழ்ச்சியை அனுபவிக்க முற்படுவர். இந்த மகிழ்ச்சியான இயல்பு அவரது பிறப்பிலிருந்து வருகிறது. எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைத் தேடும் அவரது நல்ல இயல்பு, வேறு யாருடையதாக இருக்க முடியாது. உங்கள் நண்பர்கள் மிதுன ராசியாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களை சோகமாக இருக்க விரும்பமாட்டார்.

​சிம்மம்

சிம்ம ராசியினர் சிங்கத்தைப் போலவே, சக்திவாய்ந்தவர்கள். இவர்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் ஒழுக்கமானவளாக இருப்பார்கள். எதிர்மறை சிந்தனையை அகற்றும் மந்திர சக்திகள் இவர்களிடம் உள்ளன. மகிழ்ச்சியைத் தரும் கருத்துக்களைப் பற்றி பேச விரும்புவார்கள். நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் சிறிய உதவி செய்தால், அவர்கள் எப்போதும் உங்களை கைவிடமாட்டார்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்றால், இந்த ராசியினர் நீங்கள் மகிழ்ச்சி அடைய எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

துலாம்

துலா ராசியினர் ஒரு மென்மையானவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் வாழ விரும்புவார்கள். அவர்கள் எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் சரி, அந்த வாழ்நாள் முழுவதும் அவர்கள் எப்படி நன்றாக, மகிழ்வாக வாழ வேண்டும் என்று யோசிக்கக் கூடியவர்கள். ஒருபோதும் எந்த ஒரு கவலை தரக் கூடிய விஷயங்களை அல்லது சூழ்நிலைகளை லேசாக எடுத்துக்கொள்வதில்லை. அதிலிருந்து விடுபட அவர்களின் படைப்பாற்றல் மிகப்பெரிய சக்தியாக அமையும். இவர்கள் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியைக் காண்பதோடு. அவர்களுக்கே நடனம் அல்லது பாடுவது என ஈடுபட்டுக் கொண்டு துன்பத்திற்குத் துன்பம் தரக் கூடியவர்களாக இருப்பார்கள்.

​தனுசு

மற்றவர்களின் இதயத்தை மகிழ்விக்க இந்த ராசியினர் எப்போதும் ஆர்வமுடன் இருப்பார்கள். புதிய நபர்களை அடைய அதிகம் விரும்புவார்கள், அவர்களுடன் நேரத்தை செலவிடுவார். தனுசு ராசியினர் தங்கள் வருத்தத்திலிருந்து தப்பிக்கும் திறனைக் கொண்டுள்ளனர். எப்போதும் புதிய விஷயங்களைச் செய்ய முயல்வதை நாம் காணலாம். புதிய இடங்களை சென்று பார்த்து ரசிப்பதிலும், புதிய விஷயங்களை அக்கறை செலுத்துவதிலும் இந்த ராசியினர் ஒருபோதும் தயங்குவதில்லை. தனது தோழர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பக் கூடியவர்கள். இவர்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் இவர்களின் நகைச்சுவை உணர்வு. நீங்கள் உலகப் பிரச்சினைகளிலிருந்து வெளியேற விரும்பினால், உங்களுக்கு தனுசு ராசியால் கண்டிப்பாக உதவ முடியும்.