விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பம்!!

431

நீலகிரி….

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி-மல்லிகா தம்பதி. கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு சந்தியா (25), ஸ்ரீநிதி (21) என்ற இரு மகள்கள் உள்ளனர். கோவையில் ஸ்ரீநிதி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை ஸ்ரீநிதியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஸ்ரீநிதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மதியம் ஸ்ரீநிதியின் தந்தை கணேசமூர்த்தி ஸ்ரீநிதிக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது.நீண்ட நேரமாக போன் செய்தும் பதில் வராததால், மகள் வீட்டில் இருக்கிறாரா என அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்தார்.


அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ​​நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் ஜன்னல் வழியாக அங்கிருந்தவர்கள் பார்த்தனர்.

அப்போது, ​​ஸ்ரீநிதி வீட்டின் அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.