அதிகாரியுடன் டேட்டிங்.. விலை உயர்ந்த பரிசுகள்.. வம்பில் மாட்டிய நடிகை நவ்யா நாயர்!!

2162

நவ்யா நாயர்..

தமிழில் அழகிய தீயே, மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை வளையத்திற்குள் சிக்கியுள்ளார் நவ்யா நாயர்.

சுங்கத் துறை கூடுதல் ஆணையரும் ஐஆர்எஸ் அதிகாரியுமான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஜூன் மாதம் அவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

அவர் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில், சச்சின் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 2.46 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், 2011ஆம் ஆண்டு அவருடைய சொத்து மதிப்பு வெறும் 1.4 லட்சம் மட்டுமே. 2022ஆம் ஆண்டு அது 2.1 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நடந்த பண மோசடி விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.


சமீபத்தில் குற்றப் பத்திரிகையின் ஒரு பகுதியையும் தாக்கல் செய்தனர். அதில், சச்சின் சாவந்த் செல்போன் சேட்டிங், உரையாடல் உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்தபோது மலையாள நடிகை நவ்யா நாயருக்கும் சச்சின் சாவந்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததும், நெருங்கிய பழகிய அவர்கள் டேட்டிங் சென்றதும் கண்டறியப்பட்டது. நவ்யா நாயரை சந்திப்பதற்காகவே சச்சின் தொடர்ந்து 8- 10 முறை கொச்சினுக்கு சென்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நவ்யா நாயருக்கு தங்க நகைகள் உள்பட விலை உயர்ந்த பொருட்களை சச்சின் சாவந்த் பரிசளித்துள்ளார் என்பதையும் அமலாக்கத் துறை கண்டறிந்தது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணையில், தங்களுக்குள் எந்த நெருக்கமும் இல்லை எனவும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்றும் நவ்யா நாயர் வாக்குமூலம் அளித்தார். இதேபோல சச்சின் சாவந்தின் மற்றொரு பெண் தோழியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளது.

நவ்யா நாயர் தொடர்பான வெளியாகியுள்ள பகீர் தகவல்கள் மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த நவ்யா நாயர், “சச்சின் சாவந்த் நட்பின் அடிப்படையில்தான் நகைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். அவருடன் எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்கள் வீட்டுக்கு அருகே வசித்தபோது சாவந்துடன் பழக்கம் ஏற்பட்டது.

சச்சின் தனது பிறந்தநாளின் போது என்னுடைய குழந்தைகளுக்கு சில தங்க நகைகளை பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்கு செல்ல நான் ஏற்பாடு செய்தேன். இதைத் தாண்டி எங்களுக்கு இடையே வேறு எந்த உறவும் இல்லை. இதைத்தான் அமலாக்கத் துறையிடமும் தெரிவித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.