அம்மாவின் இறப்பு கணவருடன் பிரச்சனை… சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய கேரளப் பெண்!!

79

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் தூக்கில்தொங்கியப்படி கேரளப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருக்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள அறையில் கடந்த வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய இவருக்கு அருகில் பயணம் சிதறிகிடந்துள்ளது.

பணியாளர்கள் மட்டுமே செல்லும் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்த இந்த பெண்ணின் அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் சடலத்தை அடையாளம் கண்டனர். கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த ரேஷ்மி அவரது கணவருடனான பிரச்சனையால் பெற்றோருடன் வசித்து வந்தார்.

கூடுதல் வீரக்தியை கொடுக்கும் விதமாக, கடந்த மாதம் ரேஷ்மியின் தாய் இறந்திருக்கிறார். இதையடுத்து, ரேஷ்மி கடந்த 24ம் தேதி அவரது வீட்டைவிட்டு வெளியேறினார். ரேஷ்மி காணாமல் போனதையொட்டி குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வந்தார்கள்.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஊழியர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறையில் இரும்புக் கட்டில் கைப்பிடியில் துப்பட்டா பயன்படுத்தி தூக்கிட்டு இருக்கிறார் ரேஷ்மி. மொபைல் போன் அல்லது மற்ற எந்த ஆதாரங்களும் அவ்விடத்தில் இல்லை. மேலும், ரேஷ்மியை சுற்றி ரூபாய் நோட்டுக்கள் சிதறி இருந்துள்ளது.


மேலும், ரேஷ்மி அதிகாரிகள் மட்டுமே செல்லும் அறைக்குள் எப்படி சென்றார் என்பது தெரியவில்லை. மேலும், அங்கிருந்த CCTV காட்சிகளில் அவர் தண்ணீர் பாட்டிலுடன் நள்ளிரவு 1 மணிக்கு நடந்து சென்றது பதிவாகி இருக்கிறது. மேலும், அவர் ரயில்வே நிலையம் வந்தபோது அவரை சுற்றி யாருமே இல்லாததும் CCTV காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது