ஆட்டோவில் சென்ற இளம்பெண்… இளைஞர்கள் விரட்டியதில் பலி.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த பொலிசார்!!

118

இந்தியாவில்..

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.

அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை வேகமாக இழுக்க, கீர்த்தி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த கீர்த்திக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவரது தோழி ஒருவர் உடனடியாக கீர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். கீர்த்திக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன்,


அவரது மூளையிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில், கீர்த்தியின் மொபைலைப் பறித்துச் சென்ற இளைஞர்களை பொலிசார் தீவிரமாகத் தேடத்துவங்கியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஓரிடத்தில் அவர்களை பொலிசார் கண்டுபிடிக்க, பொலிசாரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளார்கள் அந்த இருவரும். பொலிசார் அவர்களைத் திருப்பிச் சுட, ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார், மற்றொருவர் தப்பியோடிவிட்டார். சிக்கியவர் பெயர் பல்பீர் குமார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவரிடம் கீர்த்தியிடமிருந்து பறிக்கப்பட்ட மொபைல் இருந்துள்ளது.

மறுநாள், திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு பொலிசார் வாகன சோதனையில் ஈடுபடிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பொலிசார் நிற்கச் சொல்ல, அவர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்கள்.

பொலிசார் அவர்களை ஜீப்பில் துரத்த, அவர்களில் ஒருவன் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் துணை ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே, பொலிசார் திருப்பிச் சுட, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் காலில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் கீழே விழ, மற்றவர் தப்பியோடியுள்ளார். அந்த நபர் பெயர் ஜித்தேந்திரா என்றும், கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜித்தேந்திராவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜித்தேந்திராதான் பிரீத்தி ஆட்டோவிலிருந்து கீழே விழ காரணமானவர் என்றும், அவர் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி முதலான 12 வழக்குகள் உள்ளன என்றும், 2020ஆம் ஆண்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.