உடன் பிறந்தவர்கள் சந்தோஷமா இருக்காங்களே : ஏக்கத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

293

ஜெயசிங்….

தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூ.க்.கு போட்டு த.ற்.கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும் உண்டு. இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் ஜெயசிங் தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லையே, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்தார். இதன் காரணமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.


மேலும் அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். மேலும் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயசிங் தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவர் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு ஜெயசிங் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் விரைந்து வந்து ஜெயசிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருமண ஏக்கத்தில் ஜெயசிங் த.ற்.கொலை செய்து கொண்ட அதிர்ச்சி விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவம் குறித்து மேலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.