உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!

290

தேனி..

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த லோகிதாசன், அதே பகுதியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு காதலித்து வந்தார். ஜெயப்பிரதா, லோகிதாசனை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் எரிச்சலான லோகிதாசன் காதலி ஜெயபிரதாவை அவர் அணிந்திருந்த சேலையை கொண்டு கழுத்தை இறுக்கி நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


லோகிதாசனுக்கு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை காவல்துறை தண்டனை விதித்து நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளி லோகிதாசனை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.