என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

77949

ராமநாதபுரம்..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் – திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து வலிப்பு நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் திவ்யா மனமுடைந்து இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தனது குழந்தை வலிப்பு நோயால் மிகவும் அவதிப்படுவதாகவும், யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை, என் தாலி கயிற்றை காலம் முழுவதும் உன் இடுப்பில் கட்டிக்கொள் என கணவருக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வலிப்பு நோய் காரணமாக 8 மாத குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லவராயனேந்தல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நயினார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.