கடலில் தவறி விழுந்து இறந்த மனைவி.. அலறிய கணவன்.. 7 மாதத்துக்கு பின் காட்டிக் கொடுத்த முகம்!!

427

கடலூர்…

கடலில் விழுந்து தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக போலீஸையே நம்ப வைத்து நாடகமாடிய கணவன் 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த உண்மையை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் கடலூரையே நடுங்க வைத்திருக்கிறது. எதற்காக இந்த கொலை நடந்தது.. எப்படி உணை தெரிந்தது.. இங்கு பார்க்கலாம்.

கடலூரை அடுத்த பச்சையாங்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (35). இவருக்கு கார்த்திகா (33) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, கடந்த மே மாதம் சாமியார்பேட்டை கடற்கரைக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு ராமநாதன் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் கடலில் கால் வைத்துள்ளனர்.

அப்போது திடீரென பெரிய அலை கார்த்திகாவை இழுத்துச் சென்றதாக கதறி அழுதார் ராமநாதன். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு அழுது கொண்டே ஓடிய அவர், தனது மனைவியை காப்பாற்றுமாறு கூறினார். இதையடுத்து, போலீஸார் சென்று பார்த்த போது கரையில் கார்த்திகா உடல் ஒதுங்கி இருந்தது. இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், ராமநாதனுக்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.


இந்த சூழலில், ராமநாதன் மனைவி இறந்த துக்கம் சிறிது இல்லாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு, மது அருந்திக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். இதனை போலீஸார் அவ்வப்போது பார்த்துள்ளனர். இது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மீண்டும் கார்த்திகாவின் பிரதேப் பரிசோதனை அறிக்கையை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது கடலில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்ட கார்திதகாவின் முகத்தில் தாடை உடைப்பட்டிருந்தது போலீஸாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதையடுத்து, ராமநாதனை தட்டி தூக்கிய போலீஸார் அவரை தங்கள் பாணியில் விசாரித்த போது, நடந்த உண்மைகளை அவர் கூறினார். அதாவது கார்த்திகாவுக்கு ஒரு நபருடன் தகாத உறவு இருந்ததாகவும், அதை பல முறை தான் கண்டித்தும் கார்த்திகா அந்த பழக்கத்தை விடவில்லையாம்.

மேலும், சுமார் ரூ.2 லட்சம் அளவுக்கு கடன் வாங்கி அந்த நபருக்காக கார்த்திகா செலவழிந்து வந்தாராம். இது பற்றி தெரியவந்ததும் ஆத்திரத்தில் கார்திகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராமநாதன், அவரை கடலுக்கு அழைத்து சென்றிருக்கிறார். பின்னர், அவரை கடல் நீரில் மூழ்கடித்து தனது காலால் அவரது முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்திருக்கிறார்.

பின்னர் தனது மனைவி கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக ராமநாதன் நாடகமாடி இருக்கிறார். ராமநாதனின் இந்த வாக்குமூலத்தை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்து நாடகமாடி போலீஸாரை ஏமாற்றிய கணவன், 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.