கணவனை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!

641

தூத்துக்குடி..

இது குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பேரூரணி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(36). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 3 மாதங்களுக்கு பின்னர் கடந்த 7ந்தேதி கருப்பசாமி ஊருக்கு வந்துள்ளார்.

அன்று குடும்பத்தினருடன் கருப்பசாமி இரவில் உணவருந்தியுள்ளார். பின்னர் வீட்டின் வெளியே கருப்பசாமி படுத்துறங்கி உள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் கருப்பசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தட்டாபாறை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் கருப்பசாமி கொலை வழக்கில் அவரது மனைவி கனகலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து போலீசார் கனகலட்சுமியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் கனகலட்சுமி செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை நடத்திய போது ஒரு நம்பரிலிருந்து அடிக்கடி கனகலட்சுமி அழைப்பு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கனகலட்சுமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனது கணவனை கொன்றது, தனது உறவினரான கள்ளக்காதலன் தான் என்பதை ஒத்துக் கொண்டார். கனக லட்சுமிக்கும், கருப்பசாமிக்கு இடையே கடந்த ஓராண்டு முன்பு பிரச்சனை ஏற்பட்டு கடம்பூர் மகளிர் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

அப்போது கனகலட்சுமி உறவினர் சோழபுரத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் என்பவர் கனகலட்சுமி க்கு உதவி செய்து வந்துள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசி வந்துள்ளனர். இது குறித்து தெரிந்து கொண்ட கருப்பசாமி கண்டித்தது மட்டுமின்றி, கனக லட்சுமியை சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தனது கணவர் அடிக்கடி தன்னிடம் தகறாறு செய்வதை கனகலட்சுமி ரவிச்சந்திரனிடம் கூறி வந்துள்ளார். அவரும் கனகலட்சுமி ஆறுதல் சொல்ல நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையில் கருப்பசாமியின் தொந்தரவு அதிகரிக்கவே கனகலட்சுமி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் கருப்பசாமியை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி வேலைக்கு போய்விட்டு ஊருக்குத் திரும்பிய கருப்பசாமி வந்ததும், கனகலட்சுமி ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அன்று இரவே தனது இருசக்கர வாகனத்தில் ரவிச்சந்திரன் பேரூரணிக்கு வந்து வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமியை ரவிச்சந்திரன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார்.

பிறகு நெஞ்சில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ரவிச்சந்திரன் கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கணவனை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.