கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை முயற்சி… காதலனும் எடுத்த விபரீத முடிவு!!

206

திருவாரூர்..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் அஜய் (20).

இவர் 17 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி உறவு வைத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்த விவகாரம் பெற்றோருக்கும் ஊராருக்கும் தெரிந்து விடும் என பயத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சிறுமி குடித்து மயங்கி உள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த சிறுமியை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும், சிறுமி பூச்சிமருந்து சாப்பிட்டதை அறிந்த இளைஞன் அஜய்யும் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி உள்ளார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் இளைஞன் அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.