கல்விக் கட்டணம் செலுத்தாததால் 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

357

நெல்லை….

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனியார் நிறுவனங்களில் ஊழியரான இவரின் மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களின் மகன்கள் நரேன், சுர்ஜித். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இதில் நரேன் 9ம் வகுப்பு படித்து வந்தார் டிசம்பர் 4 ம் தேதி காலையில் நரேன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சுர்ஜித் மட்டும் பள்ளிக்கு சென்று இருந்தார். பள்ளி முடிந்ததும் மாரியம்மாள் மாலையில் சுர்ஜித்தை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்றார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

மாரியம்மாள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் நரேன் திறக்கவில்லை. உடனே அங்கு வந்த நாகராஜன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது நரேன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.


இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த நரேனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நரேனின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பள்ளிக்கூடத்தின் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டவர்கள், பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

மாணவன் நரேனின் பெற்றோர் “பொருளாதார சூழ்நிலையால் நரேனுக்கு டிசம்பரில் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதுகுறித்து நாங்கள் பள்ளி ஆசிரியர், முதல்வரிடம் தெரிவித்துவிட்டோம்.

அவர்கள் தொடர்ந்து கட்டணத்தை செலுத்துமாறு வலியுறுத்தினர். அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவர் 2ம் தேதி பள்ளிக்கு சென்ற நரேனிடம், கல்வி கட்டணத்தை செலுத்தும் படி வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நரேன் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம்.

பள்ளி ஆசிரியர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி நிர்வாகத்திடம், நரேனின் பெற்றோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.