கள்ளக்காதலின் உச்சம்.. யூடியூப் பார்த்து மனைவி செஞ்ச பகீர் காரியம்!!

88738

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியில் குணசேகரன் (30) – இளவரசி (27) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குணசேகரன்- இளவரசி தம்பதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, எலச்சிபாளையம் அருகே நல்லம்பாளையம் சக்திவேல் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர்.

அப்போது, தோட்ட உரிமையாளர் சக்திவேலுவுடன் இளவரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் சிறிது காலத்தில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த விவகாரம் கணவன் குணசேகரனுக்கு தெரிய வந்தது. இதனால் மனைவியை அவர் கண்டித்துள்ளார். மேலும் ஒரு மாதத்திற்கு முன், மனைவியுடன் சொந்த ஊரான சின்னகாக்காவேரிக்கு சென்று விட்டார். எனினும் சக்திவேலும்- இளவரசியும் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு இரவு 11.30 மணியளவில், சக்திவேல் தனது நண்பர்கள் 2 பேருடன் இளவரசியை சந்திக்க சென்றார். அப்போது, இளவரசிக்கு போன் செய்து கதவை திறக்குமாறு கூறியுள்ளார்.

அவர் கதவை திறந்ததும், உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குணசேகரன் முகத்தில் தலையணையை வைத்து சக்திவேல், இளவரசி மற்றும் கூட்டாளிகள் என 4 பேரும் அழுத்தி உள்ளனர்.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குணசேகரன் அலறித் துடித்தார். மேலும் அவரது அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை கவனித்த சக்திவேல் அவரது நண்பர்களுடன் தப்பியோடி விட்டார். இளவரசியை அப்பகுதியினர் மடக்கி பிடித்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இளவரசியை கைது செய்தனர். விசாரணையில், சொந்த ஊருக்கு வந்த பிறகு செல்போனில் பேசிய போது கணவன் குணசேகரனை கொலைச் செய்ய இளவரசி திட்டம் தீட்டியது அம்பலமானது. போலீசாரிடம் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என்பது தொடர்பான வீடியோக்களை யூ-ட்யூப்பில் பார்த்துள்ளார்.

அதன்படி, அருகில் உள்ள மளிகை கடையில் மைதா மாவு வாங்கி வந்து அதனை உருண்டையாக உருட்டி, தலையணையை வைத்து அழுத்தும் போது, கணவன் வாயை திறந்து கத்த முயன்றால், அவரது வாயில் அதை திணித்து அடைக்க தயாராக வைத்திருந்தார்.

மேலும், மைதா மாவு தூவினால், கைரேகையை தடயவியல் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் இளவரசி தெரிவித்துள்ளார். கணவனை தீர்த்தக்கட்ட முயன்ற இளவரசி சிக்கிய நிலையில், அவரது கள்ளக்காதலன் சக்திவேல், அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.