காணாமல் போன மகள் கடன் வாங்கியதாக மோசடி : போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

306

சென்னை….

சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 58). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளார். நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணமான மகள் மாயமானார்.

அவரை பற்றி எந்த தொடர்பும் இரண்டு வருடங்களாக இல்லாத நிலையில் கடந்த மூன்று மாதமாக மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சரவணன் உட்பட மூன்று பேர் கோகிலாவிடம், உன்னுடைய மகள் பல லட்சம் கடன் வாங்கி விட்டு திருப்பி தரவில்லை என கூறி தொந்தரவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோகிலா சேலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்தநிலையில் கோகிலாவிற்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை அத்துமீறி சிலர் அபகரித்து விட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக மூதாட்டி கோகிலா அளித்த புகாரின் பேரில் போலிசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.