கேக் வெட்டி திருமண நாள் கொண்டாட்டம்… நள்ளிரவில் கர்ப்பிணிப் பெண் தற்கொலை!!

128

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பவானி என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரையும் இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த பவானியை நேற்று கணவர் சக்திவேல் வீட்டிற்கு அழைத்து வந்தார். திருமண நாள் என்பதால், இருவரும் வீட்டில் இருந்து அழைத்து வந்து, தங்கள் வீட்டில் திருமண நாளை கொண்டாடியதாக தெரிகிறது.

இந்நிலையில் திருமண நாள் கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


சக்திவேல் வெளியே சென்றதும் வீட்டில் தனியாக இருந்த பவானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற கணவன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியபடி கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.