Thursday, October 24, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
891 POSTS 0 COMMENTS
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சங்கீதா (34), மகன் ரோகித் (7), மகள் தர்ஷிகா  (5). கொண்டலாம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த சங்கீதா, இரண்டு...
என் கணவர் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்க வேண்டும்” என்று பூஜை முடித்த கையோடு கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் பாசக்கார மனைவி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மனைவியைக் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், கவுசாம்பி மாவட்டம், இஸ்மாயில்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் (வயது 32). இவர் நேற்று இரவு கர்வா சாத் பண்டிகைக்கு மனைவி சவிதா (30) சமைத்த...
அத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கல்யாணம் செய்தும், புருஷனோட பேசக் கூட விடாத மாமியாரை வைத்துக் கொண்டு எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று மருமகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோயில்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் 56 வயது பாபு. இவருக்கு சுருதிபாபு(24) என்கிற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மகள் சுருதிபாபுவை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், மேல தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற தலையாரி. இவரது மனைவி முத்தம்மாள்(65). இந்த தம்பதிகளுக்கு மந்திரமூர்த்தி (40), சின்னத்துரை (30) என்ற 2...
மாமல்லபுரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் பணியில் இருந்த தனியார் காவலாளியை நோ எண்ட்ரி பகுதியில் காரில் நுழைந்தவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார்...
சாதாரண கவுன்சிலர் தானே? என்று யாரும் கேட்டு விட முடியாது. இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள கிடுகிடுவென கோடிகளில் எகிறியது சொத்து மதிப்பு. இத்தனைக்கும் பெரிய நகரப் பகுதிகளில் எல்லாம் கவுன்சிலர் கிடையாது. ஆனா ஆளுங்கட்சி கவுன்சிலர் என்கிற கெத்து போதும் என்று சொத்துக்களைக் குவிப்பதில் கோதாவில் இறங்கியிருக்கிறார் திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி. காஞ்சிபுரம் மாவட்டம், 2வது வார்டு திமுக கவுன்சிலரான ராஜலட்சுமி மீதும், அவரது குடும்பத்தினரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக்...
நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரையில் குடிபோதையில் இருந்த ஜோடிகள் போலீசாரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது அந்த ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ​​லூப் ரோடு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக கார் ஒன்று நிறுத்தப்பட்டது. அங்கு வந்த போலீசார், காரில்...
வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமத்தில் 105 வயதில் மாரியாயி என்கிற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு, 70 வயதில் சுப்பம்மாள், 68 வயதில் செல்லம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர்...
காதலித்து வந்தவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில், காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்கள் என்கவுண்டர் செய்து கொல்ல வேண்டும்...
திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனையின் அலட்சியப் போக்கு காரணமாக, அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பருதலம். இவரது மனைவி ஜமீனா மேரி. இவர்களது மகள் செலஸ்டினா, அஞ்சலக எழுத்தராக கூத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். செலஸ்டினாவுக்கும் அவரது கணவர் பாண்டியனுக்கும் திருமணமாகி ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமடைந்த...