சந்தேக புத்தியால் மனைவி, மாமியாருக்கும் கணவன் செய்த விபரீத செயல்!!

289

முருகன்…

கட்சிக்குச்சான் கிராமத்தை சேர்ந்த குடிப்பழக்கம் கொண்ட முருகன் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

கணவனிடம் கோபித்துக் கொண்டு முருக்கம்பட்டியில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மகாலட்சுமியை தேடி குடிபோதையில் சென்ற முருகன்,

மனைவியை அனுப்புமாறும், இல்லையெனில் தான் வாங்கிப்போட்ட நகைகளை திருப்பித் தருமாறும் தகராறு செய்துள்ளார்.


அவரை அமைதிப்படுத்தி தாயும், மகளும் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். குடிபோதையிலும் சந்தேக வெறியிலும் இருந்த முருகன்,

நள்ளிரவில் இருவரையும் வீட்டில் கிடந்த கடப்பாரையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.