டிக் டாக்கில் அம்முகுட்டி… இளைஞனிடம் பழகி இளம்பெண் செய்த மோசமான செயல்!!

982

தமிழகத்தில் டிக் டாக் மூலம் இளைஞரை ஏமாற்றி சுமார் 97,000 ரூபாய் மோ சடி செய்த இளம் பெண்ணை பொலிசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் போடி லைன் சூர்யா அப்பார்மென்ட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். 23 வயதான இவர் மதுரை தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் மற்றும் முகநூல் செயலிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக கல்லூரி விடுமுறை என்பதால் டிக்டாக் செயலியை அளவுக்கு மீறி உபயோகித்த நிலையில், டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த சுசி என்கிற பெண் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் ராமச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து சுசி என்ற அம்முகுட்டியிடம் டிக்டாக் மூலம் அதீத அன்பு காட்டியுள்ளார் ராமச்சந்திரன். சுசியின் முகநூல் பக்கத்திலும் இணைந்து, இருவரும் பேசி வந்துள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட சுசி தனது குடும்பத்தில் பி ரச்சனை எனவும், மருத்துவமனை செலவுக்கு பணம் தேவை எனவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை நம்பிய ராமச்சந்திரன் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு 97,000 ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளார்.


தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட சுசி, சில நாட்கள் பேசாமல் இருந்ததோடு, முகநூல் மற்றும் டிக்டாக் செயலியில் தலைகாட்டாமல் அணைத்து வைத்ததால், ச ந்தேகமடைந்த ராமச்சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து சுசி மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் தனிப்படை அமைத்து தே டி வந்தனர். மதுரை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி அருகில் தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம்பெண் சுசியை காவலர்கள் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து டிக்டாக் மூலம் மோ சடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சி றையில் அடைத்துள்ளனர்.

பொலிசாரின் முதற்கட்ட வி சாரணையில், ஆடம்பரமாக வாழ நினைத்த இளம்பெண் சுசி அதற்கு ஒரு கருவியாக டிக்டாக்கை பயன்படுத்தி உள்ளார் எனவும், டிக்டாக் மற்றும் முகநூல் மூலம் பலபேரிடம் இதுபோல பணத்தை மோ சடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.