தனிமையில் இருந்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்!… சிறிது நாட்களில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

918

வீடு புகுந்து காதலன் தாக்கியதால் அவமானத்தில் தற்கொலை செய்த கொண்ட காதலியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகையின் ராதாநல்லூரை சேர்ந்தவர் சுபஸ்ரீ, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சுபஸ்ரீ படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உதயபிரகாஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதயபிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் சுபஸ்ரீ பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதனால் கோபமடைந்த உதயபிரகாஷ், காதலிக்கும் போது இருவரும் எடுத்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டான், இதனால் முற்றிலுமாக சுபஸ்ரீ உதயபிரகாசிடம் பேசவில்லை என தெரிகிறது.


இதனால் கோபமடைந்த உதயபிரகாஷ், கடந்த 24-ம் திகதி சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தட்டிக்கேட்ட சுபஸ்ரீயின் சகோதரி கர்ப்பிணியான கலைமதியையும், சுபஸ்ரீயையும் உருட்டுக்கட்டையைக் கொண்டு உதயபிரகாஷ் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் அவமானப்பட்ட சுபஸ்ரீ மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார், வலி தாங்க முடியாமல் வெளியில் ஓடிவந்த சுபஸ்ரீயை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார், சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான உதயபிரகாஷை கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.