திட்டிய புதுமனைவி : யூடியூப்பைப் பார்த்து கணவர் செய்த மோசமான செயல்!!

320

சவுரப் யாதவ்….

புது மனைவி வருமானம் போதவில்லை என்று திட்டியதால் ஒரு கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் 20 வயதான சவுரப் யாதவ் என்பவர் ஒரு நிறுவனத்தில் உணவு விநியோக நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.

அவர் சமீபத்தில் வகாட் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவருக்கு வருமாணம் போதவில்லை. இதனால் அவரின் புது மனைவி அவரை திட்டிக்கொண்டேயிருந்தார் .அதனால் அவர் வீட்டுக்கு வீடு உணவு டெலிவரி செய்யும்போது பல பெண்களின் கழுத்திலிருந்த தங்க செயினை அறுத்துளார்.

இதற்கிடையே கடந்த வாரம் வகாட் பகுதியில் ​​போலீஸ் கான்ஸ்டபிள்கள் நிதின் செங்ஜே மற்றும் விஜய் காம்பயர் ஆகியோர் ஸ்கூட்டரில் யாதவ் சுற்றி வருவதைக் கவனித்தனர். எனவே அவரை அந்த போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.


அப்போது போலீசார் யாதவிடம் நடத்திய விசாரணையின் போது, ​​அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் புனேவில் ஏழு இடங்களில் இருந்து121 கிராம் தங்கச் சங்கிலிகளைப் பறித்ததாக போலீசாரிடம் கூறினார்.

சங்கிலி பறிப்பதைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் ஒரு யூ-டியூபில் பல சங்கிலி பறிக்கும் வீடியோக்களைப் பார்த்து இதை கற்றுக்கொண்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.