திருமணமாகி 2 வருடத்தில் கணவன் 2வது திருமணம் செய்தது ஏன்? முதல் முறையாக வாய் திறந்த தெய்வம் தந்த வீடு சீதா! ஏன் தெரியுமா?

1048

தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை சீதா, முதல் முறையாக தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்து கூறியுள்ள வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா. இவர் இந்த சீரியலில் சீதா ராம் குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது.

இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள் சீரியலில் நடித்து மீண்டும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தமிழைப் போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை மேக்னா.


இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மேக்னா தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர், டான் டோனி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்களும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகினர் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மேக்னாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

பின்னர் இவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பு கருத்து வேறுபாடு ஆக மாறி விவாகரத்து வரை கொண்டு சென்றது. சமீபத்தில் நடிகை மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். விவாகரத்தான ஒரு சில நாட்களிலேயே டான் டோனி வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்ட நிலையிலும் நடிகை மேக்னா மட்டும் அமைதி காத்து வந்தார். தற்போது அவர் தனது அமைதியை கலைத்து தான் நடத்திவரும் யூடியூப் சேனலில் விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார்.

என்னிடம் பல பேர் எதற்காக விவாகரத்து செய்தீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். அது முடிந்து போன ஒன்று. என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை பேசுவதால் எந்த பயனும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எதற்காக விவாகரத்து பற்றி மௌனமாக இருக்கிறீர்கள் என்று பலரும் தொடர்ந்து என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக நான் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். நான் இதுவரை பங்கேற்ற எந்த ஒரு நேர்காணலிலும் ஒரு வார்த்தை கூட இது பற்றி பகிர்ந்து கொண்டது கிடையாது. ஏனெனில் இதை பற்றி பேசி நான் டென்ஷன் ஆவதில் எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.