திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிகள்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

4615

கர்நாடகாவில்..

கர்நாடகாவின் பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவலர் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக சக பணியாளர் பெண்ணொருவரை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

எனினும் ஒரே நிறுவனத்தில் காதலர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் அதே நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் சந்தோஷுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த சந்தோஷின் முதல் காதலி, நேரடியாக சந்தோஷை திட்டியுள்ளார். மேலும் இவர்கள் காதல் விவகாரம் சந்தோஷின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.


அவர்கள் உடனடியாக குறித்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். திருமண ஏற்பாடு குறித்து கேள்விப்பட்ட இரண்டாவது காதலி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவர் சந்தோஷை சந்தித்து தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் சந்தோஷிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். காதலிகளின் தொல்லை தாங்க முடியாமல் சந்தோஷ் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி தற்கொலைக்கு முயன்ற சந்தோஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தங்கள் மகனின் இறப்புக்கு காரணம் அவரது இரண்டு காதலிகள் தான் என சந்தோஷின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.