அண்ணன் தங்கை காதல் : பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

99628

தேனி..

தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாபுளி தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் பெரியசாமி (21). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். பெரியசாமி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான வித்யாவை காதலித்து வந்துள்ளார். வித்யா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் வித்யாவும், பெரியசாமியும் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்லாது இருவரும் அண்ணன் தங்கை உறவு முறையினர் என கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரையும் அவரவர் பெற்றோர்கள் அழைத்து கண்டித்துள்ளனர்.

இதனால் இருவரும் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இருவரையும் காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறமுள்ள தோட்டத்தில் இருவரும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.


காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வித்யா உயிரிழந்த நிலையிலும்,பெரியசாமி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

உடனடியாக பெரியசாமியை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார் வித்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முறை தவறிய காதல் விவகாரம் காரணமாக காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.