நாட்டை உலுக்கிய 8 பொலிசாரை கொன்ற பிரபல ரவுடி கைது! வெளியான வீடியோ!!

984

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர் கடந்த வாரம் முதல் தலைமறைவான ரவுடி விகாஸ் துபே இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளார். துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் கான்பூரில் 8 பொலிசார் கொல்லப்பட்டதிலிருந்து மாநிலங்கள் முழுவதும் தீவிரமாக தேடப்பட்டு வந்த விகாஸ் துபே கைது செய்யப்பட்டதை உத்தர பிரதேச காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

விகாஸ் துபே என்கவுண்டரை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்திலோ அல்லது தொலைக்காட்சி ஸ்டுடியோவிலோ சரணடைய முயற்சிக்கக்கூடாது என்பதற்காக நீதிமன்ற வளாகங்களிலும், நொய்டாவின் செய்தி தொலைக்காட்சி மையத்திலும் பொலிசார் நிறுத்தப்பட்டனர்.


இதனால், துபே தான் என்கவுண்டரில் கொல்லப்படுவோம் என அஞ்சியதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், என்கவுண்டருக்கு அஞ்சாமல் சரணடைய விகாஸ் பொலிஸுக்கு துப்பு கொடுத்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனுக்கு சென்றார்.

அவர் உஜ்ஜைனில் உள்ள இடம் குறித்து அம்மாநில பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, மத்திய பிரதேச பொலிசார் அவரை கைது செய்தனர். இன்னொரு இடத்தில் அவரை காவலில் வைக்க மத்திய பிரதேச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் அவர் இன்று உத்தரபிரதேச பொலிசிடம் ஒப்படைக்கப்படுவார்.

விகாஸ் துபே தனது கிராமமான பிக்ருவில் தன்னை கைது செய்ய வந்த பொலிஸ் குழு மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 8 பொலிசார் கொல்லப்பட்டனர்.