நிர்வாண காட்சிகளை இப்படித்தான் படம் ஆக்கினோம்.. அமலாபால் படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஓபன் டாக்!!

143

அமலாபால்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார். முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி,

மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர்.


இதனிடையே, 2019 ஆம் ஆண்டு அமலாபால் நடிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே எதிர்பார்ப்பை எதிர வைத்தது என்று சொல்லலாம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆடை படம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் ஆடை திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தது சவாலாக இருந்ததாகவும்,

அந்த படத்தில் பல கண்ணாடி காட்சிகள் இருந்ததாகவும், அது தங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. நிர்வாணமாக நடிக்க அமலா பால் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஆடை படத்தை எடுத்து இருக்க முடியாது என்றும், அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது மொத்தமாகவே 9 பேர் தான் இருந்தோம் என்று ஒளிப்பதிவாளர் கார்த்திக் கூறியுள்ளார்.