பட்டப்பகலில் காதல் மனைவியை ஓட ஓட விரட்டி 25 இடங்களில் கத்தி்யால் குத்திய கணவன் : வெளியான காரணம்!!

377

ராணிப்பேட்டை….

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா 35 வயதாகும் இவர் பெயிண்ட்ராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கியுள்ளார். இவரும் காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவில்வசித்து வரும் சனாப்பும் காதலித்தனர்.

இருவரும் 2021ல் திருமணம் செய்து கொண்டதில் இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சனாப், கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அவ்வபோது பொதுஇடங்களில் சந்தித்து பேசி வந்தனர். இதையும் கடந்த 10 நாட்களாக சனாப் தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரஹமத்துல்லா, மனைவிக்கு தெரியாமல் அவரை கண்காணிக்க தொடங்கினார். சனாப்புக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டறிந்தார்.


அவருடன் பைக்கில் நெருக்கமாக அமர்ந்து செல்வதை பார்த்து ரஹமத்துல்லா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மனைவியிடம் தட்டிக் கேட்டார். அத்துடன் “நான் ஊருக்கு போகிறேன். என் கூட திரும்ப வருவதுமவராததும் உன் கையில் இருக்கிறது” எனக் கூறினார். அதற்கு சனாப், “நீ இங்கே வரவேண்டாம். ஊரிலேயே தங்கி விடு” என கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஹமத்துல்லா, இடுப்பில் மறைத்து வைத்து இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி சனாப்பை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பயங்கரமாக வெட்டினார். இதில் சனாப் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் படு காயங்கள் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சனாப்பை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சனாப் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 25 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் ரஹமத்துல்லாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.