புதுமணத் தம்பதியர் இருவரும் விஷம் குடித்து தற்கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!

9271

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது திருவரங்குளம் நிம்புநேஸ்வரம். இந்த கிராமத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன் பொற்பனையானுக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் பிரியங்காவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில் பொற்பனையான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் தினசரி கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது தொடர்கதையானதால் பிரியங்காவிற்கு தெரியாமல் அவரது நகைகளை பொற்பனையான் அடகு வைத்துவிட்டார். நகைகளை குறித்து கேட்டபோது அத்தனையும் மது குடித்துவிட்டதாக கூறியதில் பிரியங்கா மனமுடைந்து விட்டார்.


இதனால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்துக்கொண்டார். மனைவி தற்கொலைச் செய்து கொண்டதையறிந்து அதிர்ச்சி அடைந்த பொற்பனையான் தானும் வீட்டில் தற்கொலைச் செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடிப்பழக்கத்தால் கணவன் மனைவி இருவருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.