பைக் மோதி மாணவி பலியான சம்பவம்.. இளைஞர் தொடர்பில் வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

239

கேரளாவில்..

கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம் சாலையை கடந்த கல்லூரி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த பைக் ஒன்று மோதியது. இதில் நமீதா எனும் 20 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது நண்பர் அனுஸ்ரே ராஜ் (20) காயமடைந்தார்.பைக்கை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய அன்சன் ராய் என்பவர் அப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட அன்சன் ராய் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.


அத்துடன் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்து பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாகவே அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.