மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. பயங்கர சம்பவம்!!

449

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(41). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் புஷ்பலதா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். புஷ்பலதா ​​பியூட்டிஷியன் படிப்பை படித்து வந்தார்.

தனது மனைவி புஷ்பலதாவின் நடத்தையின் முது விஜய் சந்தேகப்பட்டார். இதனால் அவருக்கும், புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், .என்.என்.யு.ஆர்.எம் காலனியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை, விஜயின் சகோதரி சமீபத்தில் வாங்கியுள்ளார்.

அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனது மனைவி புஷ்பலதாவை விஜய் நேற்று மாலை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு படுக்கை அறையில் புஷ்பலதாவின் கழுத்தை அறுத்து விஜய் கொலை செய்தார். இதன் பின் ரத்தக்கறையோடு அவர் வீட்டை வெளியேறுவதைப் பார்த்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த அப்துல்லாபூர்மெட் போலீஸார், கொலை செய்யப்பட்ட புஷ்பலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


புஷ்பலதாவை திட்டமிட்டுக் கொலை செய்தவற்காக தனது சகோதரி வீட்டிற்கு விஜய் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.இதற்காக கொலை செய்வதற்கு முதல்நாள், கத்தியை விஜய் வாங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து விஜயை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இதுகுறித்து அப்துல்லாபூர்மெட் போலீஸார் கூறுகையில்,” மனைவி புஷ்பலதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகித்த விஜய் இந்த கொலையைச் செய்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவிக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து புஷ்பலதா புகாரும் செய்துள்ளார்” என்றனர். கடந்த 2014-ம் ஆண்டு புஷ்பலதாவை தாக்கிய விஜய் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.