ரூமுக்கு வா சான்ஸ் தரேன்.. யாஷிகாவிடம் பச்சையா கேட்ட பிரபல இயக்குனர்!!

89

யாஷிகா ஆனந்த்..

முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தன் அப்பா வயது இருக்கும் இயக்குனர் ஒருவர் நான் ஆடிஷனுக்கு சென்றபோது பட வாய்ப்பு தருகிறேன். ஆனால் ஒரு கண்டீஷன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இப்போவே வாய்ப்பு ரெடி.


மேலும் நான் உன்னை சினிமாவில் வேற லெவலுக்கு கொண்டுபோய் விடுகிறேன் என கூறியுள்ளார். இதனை யாஷிகாவின் அம்மாவிடமும் எடுத்து சொன்னாராம். உடனே கோபப்பட்டு வாய்ப்பே வேண்டாம் என உதறித்தள்ளியுள்ளார் யாஷிகா. இது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய யாஷிகா என் அப்பா வயசு இருக்கும் அவருடன் நான் எப்படி முடியும்? என வேதனையோடு கூறினார்.