வங்கி மேலாளர் பண மோசடி வழக்கில் சிக்கலில் மாட்டிய அமைச்சர் : வெளியான பகீர் தகவல்!!

268

வேலூர்..

வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் உமா மகேஸ்வரி கைதாகியுள்ள சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்த இவர் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது அப்போதைய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு தெரியாமையா இருக்கும் என்றும் அல்லது அந்த அளவுக்கு துறையை மெத்தனமாக கையாண்டு இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுகிறது.

மேலும், குடியாத்தத்தில் கிளை மேலாளராக இருந்த உமா மகேஸ்வரிக்கு எந்த தகுதியின் அடிப்படையில் மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர் பதவி வழங்கப்பட்டது? இவரது தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் இந்த வேலை உமா மகேஸ்வரிக்கு கிடைத்தாலும் 2005 ஆம் ஆண்டு உமா மகேஸ்வரி சாதாரண எழுத்தராகத்தான் பணியில் சேர்ந்தார்.


அப்போது அவருக்கு 12 ஆயிரம் சம்பளம் மட்டும்தான்…பின்னர் குடியாத்தம் கிளை வங்கியில் மேலாளராக பதவி உயர்த்தப்பட்டு பணியில் அமர்ந்த இவருக்கு மாதம் 65 ஆயிரம் வரை சம்பளம் எகிறியது…

கிராம புற பெண்களின் பெயரில் போலி ஆவணம் செய்து ஒரு கோடி ரூபாய் வரை வாரி சுருட்ட இவருக்கு எப்படி தைரியம் வந்தது எனவும் மாஜி அமைச்சர் இதை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்றும் துப்பு துலக்கி வருகிறது தனி குழு.

விரைவில் இதுகுறித்து ஆட்சி மேலிடத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விசாரணை நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட பயிர் கடனில் பல்வேறு மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி வரும் சூழலில் இந்த விவகாரம் செல்லூர் ராஜூவை நோக்கி நகர்கிறது.

அதிமுக தலைமை இதை கண்டும் காணாமல் இருக்க, செல்லூர் ராஜு இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய போகிறார் என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.