வீட்டு கழிவறையில் குழந்தை சத்தம்… 16 வயது சிறுமி பெற்றோருக்கு கொடுத்த பேரதிர்ச்சி!!

99884

திருச்சி…

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அரீஷ் என்ற சூரியபிரகாஷ் (23) கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர்.

மேலும், சூரியபிரகாஷ் சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு பின்னர் கடந்த சில மாதமாக சிறுமியை விட்டு விலகிச் சென்றார். இதற்கிடையே அச்சிறுமி கர்ப்பமானார். ஆனால், அதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 23-ந் தேதி சிறுமி தனது வீட்டில் உள்ள கழிவறையில் ஆண் குழந்தை பெற்றெடுக்கவே அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர்கள் சென்று பார்த்து பேரதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அதிக ரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பெற்றோர் மகள் மற்றும் குழந்தையை மீட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவர்கள் சந்தேகப்பட்டு பெற்றோரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது, மகளுக்கு தற்போது 17½ வயது ஆவதும், திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்று இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து மருத்துவர் திருச்சி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் ஆய்வாளர் அஜீம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட விசாரணையில், வாலிபர் சூரியபிரகாஷ் தான் இதற்கு காரணம் என்பதை அறிந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.