வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதரை எட்டி உதைத்த பொலிசார்! தீயாய் பரவும் காட்சி!!

933

வேடிக்கை பார்த்த இளைஞரை போலீஸ் எட்டி உதைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதை கரையில் நின்று உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.


அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை பின்னால் நின்ற போலீஸ் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். இதில் அந்த இளைஞர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.