வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய காதலன் : வெளியே நின்று கதறி அழுத காதலி : நெஞ்சை உருக்கும் வீடியோ!!

334

சோனம் பாபு..

தன்னுடைய காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க, மண்டபத்துக்கு வெளியே நின்று அவரது காதலி கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர் சோனம் பாபு, இவரும் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர், இந்நிலையில் பாபுக்கு அவருடைய வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயித்தனர்.


பாபும் அதற்கு சம்மதம் தெரிவித்து இந்தபெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய சென்று விட்டார். இந்த விவகாரம் தெரிந்தது பாபுவின் காதலி, மண்டபத்துக்கு வெளியே நின்று கதறி அழுதுள்ளார்.

பாபு… பாபு என சத்தமிட்டபடி, ஒரே ஒரு முறை தன்னிடம் வந்து பேசும்படி அழைத்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தை கேட் போட்டு பூட்டி இந்த பெண் உள்ளே நுழைய முடியாத படி மூடி இந்த பெண்ணை மண்டபத்திற்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

இதன் பின் போலீசார் வந்து இந்த பெண்ணை கைது செய்தனர், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது