ஷகிலாதான் குடித்துவிட்டு என்னை தாக்கினார்.. வளர்ப்பு மகள் பரபரப்பு குற்றச்சாட்டு!!

220

ஷகிலா..

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையான ஷகிலா சென்னை கோடம்பாக்கம் யுனைடேட் ஸ்டேட் காலணியில் வசித்து வருகிறார். திருமணம் செய்துகொள்ளாத அவர், தனது அண்ணன் மகள் ஷீத்தலை அவர் ஆறு மாத கைக் குழந்தையாக இருந்தபோதில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஷீத்தலும், ஷகிலாவும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இதுதொடர்பாக ஷகிலா வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையின் போது சவுந்தர்யா மீது ஷீத்தல், அவரது சொந்த தாயான சசி மற்றும் சகோதரி ஜமீலா ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சவுந்தர்யா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஷீத்தல், “ஷகிலாவுக்கும் எனக்கும் 15 நாட்களுக்கு முன்பு சண்டை நடந்ததால் நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். திரும்ப அழைத்ததன் பேரில் இவ்வளவு நாள் என்னை வளர்த்தவர் என்பதால் மீண்டும் வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஷகிலாவிடம் பேச விருப்பம் இல்லாததால் அவரிடம் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஷகிலா என் சொந்த தாய், சகோதரி மற்றும் உறவினர்களை அசிங்கமாக பேசினார்.


அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் நீங்கள் ஒழுக்கமாக இருக்கிறீர்களா என திரும்ப கேள்வி கேட்டேன். சம்பவம் நடந்த அன்று நானும் ஷகிலாவும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம். இரவு நேரத்தில் ஷகிலா ஃபுல் போதையில் இருந்தார்.. என்னை ஷகிலா அடித்தார், நானும் திரும்ப அடித்துவிட்டேன்.

அங்கு வந்த வழக்கறிஞர் சவுந்தர்யா என்னை மரியாதை இல்லாமல் பேசி ஷகிலாவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். என்னை போலீஸில் சொல்லி உள்ளே தள்ளி ரிமாண்ட் செய்துவிடுவேன் என மிரட்டினார். அவரை முதல் நான் அடிக்கவில்லை. அவர்தான் அருகிலிருந்த பொருளை எடுத்து என்னை அடித்தார். இதனால் நானும் பதிலுக்கு தாக்கினேன்.

 

 

ஷீத்தலின் சகோதரி ஜமீலா பேசும்போது, “அத்தை வழக்கமாக இரவு நேரத்தில் மது அருந்துவார்… அப்போது எங்களுக்குள் சண்டை வரும்.. மறுநாள் அது சரியாகிவிடும். ஆனால், எங்களது குடுமப் பிரச்னையில் தேவையில்லாமல் சவுந்தர்யா தலையிட்டதுதான் சண்டைக்கு காரணம். ஆனால், நாங்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கிறார்கள்” என்று கூறினார்.