12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரர்.. கர்ப்பமானதால் அதிர்ச்சி!!

513

கேரளாவில்..

கேரளாவில் கொடுமையில் கொடுமையான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 வயது சிறுமியை மூத்த சகோதரர் உடலுறவு வைத்ததால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். அந்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் மருத்துவமனைக்க அழைத்து சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.

பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கேட்ட பெற்றோர்கள், கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து உயர்நீதிமன்றம் சிறுமியின் கர்ப்பத்தை பரிசோதிக்க குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் சிறுமி 34 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கூறியது.

இதைக்கேட்ட நீதிமன்றம், கரு 34 வாரங்கள் ஆகிறது, முழுமையாக வளர்ச்சியடைந்து, கருப்பைக்கு வெளியே கரு வளர தயாராகி உள்ளது. இந்த நிலையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.


மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த சிறுமியை அவரது சகோதரர் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் தொடர்ந்து உதவி பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது”