8 வயதுச் சிறுவன் கொலை : சிக்கிய காதல் ஜோடியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

864

தமிழகத்தில் 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் காதல் ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் நேற்று 8 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்ப ட்டு கிடந்தான். சிறுவனின் சடலம், கைரேகை மற்றும் முக்கியத் தடயங்களை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவனை அஜித்தும் அவரது காதலியும் கொன்றது அம்பலமானது.

பொலிசரிடம் அஜித்குமார் கூறுகையில், பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நான், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தேன். நானும் என் காதலியும் புத்தூர்பள்ளபாளையம் குளத்தில் சந்தித்து பே சினோம்.


இருவரும் மிக நெருக்கமாகவும் இருந்தோம். அப்போது குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பவனேஷ் எங்களைப் பார்த்துவிட்டான். அவனது வீடு எனது காதலி வீ ட்டின் அருகில் உ ள்ளது.

அதனால் அங்கு நடந்ததை என் காதலி வீட்டில் சொல்லிவிடுவான் என்ற பயத்தில் நாங்கள் இருவரும் குளத்தின் அருகே கிடந்த மதுபா ன பாட்டிலை எடுத்து அ வனை குத்தி கொலை செய்துவிட்டு அ ங்கிருந்து சென்று விட்டோம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அஜித்குமாரை பொலிசார் கை து செய்த நிலையில் மைனரான அவர் காதலியை கூர்நோக்கு இ ல்லத்தில் சேர்த்துள்ளனர்.