Monday, May 20, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
375 POSTS 0 COMMENTS
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கணவர் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). இவரது மனைவி ராமவள்ளி (40) அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
தங்களது மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், இளைஞரின் தாயைக் கொடூரமாக தாக்கி, அரை நிர்வாணமாக்கி, அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் தன் தரன் பகுதியைச் சேர்ந்த வாலிபர், ஒருவர் கடந்த மாதம் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேவேளை, குறித்த இளைஞரின் 55 வயதுடைய தாயை ஆத்திரத்தில் உறவினர்கள்...
தன்னுடைய காதலை மறுத்து, தனது நண்பரைக் காதலித்த காதலியையும், நண்பனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர், தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்தவர் சினேகா ஜாட் (22). இவர் அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த தீபக் ஜாட் (25) மற்றும் அபிஷேக் யாதவ் (26) ஆகிய இருவரும்...
ரோந்து போலீசாரைப் பார்த்ததும், கடத்தல்காரர்கள், நடுக்கடலில் தங்கக்கட்டிகளை தூக்கி வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரோந்து போலீசார், தங்கக்கட்டிகளை கடலில் தேடி, 6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளைக் மீட்டெடுத்துள்ளார்கள். இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இந்திய...
தொழில்நுட்பம் இரு பக்கமும் கைப்பிடி இல்லாத கத்தியைப் போன்றது. அது யார் கையில் கிடைக்கிறது? எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அலெக்ஸா உதவியுடன் தன்னுடைய தங்கையைக் காப்பாற்றிய சிறுமிக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது 15 மாத சகோதரியை அலெக்சாவின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார். தன் தங்கை விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் எதிர்பாராதவிதமாக குரங்கு...
பெங்களூருவில், கோயில் திருவிழாவில் 150 அடி உயரத்தில் இருந்த தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் போது, திடீரென எதிர்பாராத விதத்தில் தேர் சரிந்து கீழே விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரத்தில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். 27 வயதான இவர், டிப்ளமோ படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வீட்டில் இருந்தப்படியே பணத்தை சம்பாதிக்க ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். ஆரம்பத்தில் சிறுகசிறுக பணத்தை வைத்து ரம்மியில் விளையாடிய ஜெயராமனுக்கு லேசான வருமானம் கிடைத்தது. அதனால் ஆசை தொற்றிக்கொண்டதால், கடன் வாங்கி சூதாடியுள்ளார். ஆனால் அவர் நினைத்ததைப் போல பணம்...
குன்றத்தூர்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்திரபிரதேசம் ஆகிய வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பமாக தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர், வீட்டில் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினர் பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல்...
தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்த்து வந்தவர் 22 வயதான சச்சின். ஆனால் திடீரென்று சச்சின் வேலையை விட்டுவிட்டார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி முதல் சச்சினை திடீரென காணவில்லை. போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் உத்தரபிரதேச மாநிலம் தஸ்னாவில் இருந்து சச்சின் குமாரின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை மேலும் தீவிரமானது. அப்போது, உணவன ஓனரிடம் விசாரணை...
வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோராயா டெர் பீக். 28 வயதான அழகிய இளம்பெண், அடுத்த மாதம், மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மன நல ஆலோசகராக வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஸொராயா, மன அழுத்தத்தாலும், ஆட்டிஸக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தனது கல்விப் படிப்பை முடிக்க முடியவில்லை. பத்து ஆண்டுகளாக எல்லா வித சிகிச்சை முறைகளையும் முயன்று பார்த்தும் எந்த பலனும் கிடைக்காததால்...