இன்னும் திருமணம் கூட ஆகலை… 27 வயதில் பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு!!

760

கர்நாடக மாநிலம் ராம்நகர், ஹரோஹள்ளி தியாவச்சந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர் பெங்களூரு மைக்கோலே-அவுட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சிவாஜி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என கூறி விடுமுறை கேட்டுள்ளார். விடுமுறையில் ஊருக்குச் சென்ற மஞ்சுஸ்ரீ, மனமுடைந்து தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இடமாற்றம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.