கண்களை மூடச்சொல்லி வருங்கால மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

895

ஆந்திரா…

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள கொம்மாளபுடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் ராமு நாயுடுவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மே 26ஆம் தேதி திருமணத்தை நடத்தி முடிக்கவும் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் ராமுவுக்கு போன் செய்த மணப்பெண், சர்ப்ரைஸ் கிஃப்ட் தர விரும்புகிறேன் எனக்கூறி ராமுவை கொம்மாளபுடி பகுதியில் உள்ள மலை கோயிலுக்கு அழைத்துள்ளார்.

வருங்கால மனைவி தரப்போகும் பரிசை பெற பரவசத்துடன் தனது இரு சக்கரவாகனத்தில் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தார் ராமு.


உற்சாகம் பொங்கியபடி வந்து நின்ற ராமுவிடம் மலை உச்சிக்கு சென்று அந்த பரிசை கொடுக்கிறேன் என இளம்பெண் கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் பரிசை கொடுப்பதற்கு முன்னர் கண்களை மூடுமாறு இளம்பெண் கேட்டுள்ளார்.

அதன்படி, ராமுவும் கண்களை மூடி பரிசுக்காக காத்துக்கொண்டிருந்த போது ராமுவின் கழுத்தில் இளம்பெண் கத்தியால் கிழித்துள்ளார். என்னவென்று சுதாரிப்பதற்குள் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டத்தொடங்கியது.

மலை உச்சி என்பதால் உதவிக்கும் யாரும் அங்கில்லை. இந்நிலையில், ராமுவே 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். தற்போது மருத்துவமனையில் ராமுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அனகாபல்லி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமுவை திருமணம் செய்துகொள்ள பிடிக்காமல் திருமணத்தை தவிர்க்கும் நோக்கில் இளம்பெண் ராமுவின் கழுத்தை அறுத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.