மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் காவேரி நகர் அருகிலுள்ள அரோக்கியபுரத்தில் இயங்கி வருகிறது. எஸ்பியாக மீனா ஐபிஎஸ் பணியாற்றி வரும் நிலையில், இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். காவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் எஸ்.பி அலுவலகத்தில் உள்ள ஒரு குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வு அறையில் ஆண் போலீஸும், பெண் போலீஸும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட அங்கு பணியில் இருந்த சக காவலர்கள், டிஎஸ்பிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டிஎஸ்பி அங்கு வந்த நிலையில்,

கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்ததால் கதவைத் தட்டியுள்ளார். ஆனாலும், யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் கோபமான டிஎஸ்பி ‘நீங்களாக கதவைத் திறக்கிறீர்களா அல்லது நான் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வரட்டுமா?’ என்று ஆவேசமாக கத்தியுள்ளார்.
இதனையடுத்து பயந்து போன இருவரும் கதவைத் திறந்துகொண்டு கூனிக் குறுகியபடி வெளியே வந்துள்ளனர். இருவரையும் பார்த்த டிஎஸ்பி, எஸ்.பி அலுவலகத்தில் செய்கிற வேலையா இது என கடுமையாக எச்சரித்துள்ளார்.

இருவரும் தெரியாமல் செய்துவிட்டோம், எங்களை மன்னித்து விடுங்கள் என்று டிஎஸ்பியிடம் கெஞ்சியுள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் எஸ்.பி மீனாவுக்கு தெரியவந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவு போட்டார்.
இது தொடர்பாக விசாரித்து ஏடிஎஸ்பி வேணுகோபால் அறிக்கை அளித்தார். அதில் ஆண் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் கம்பியூட்டர் ஆபரேட்டராக பணிபுரிபவர் என்பதும், பெண் போலீஸ் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில்

பணியாற்றுபவர் என்றும் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பதும் தெரியவந்தது. காவல் நிலையத்தில் இரவு பணியை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி மயிலாடுதுறை வந்துள்ளார் பெண் போலீஸ். அவரை ஆண் போலீஸ் பைக்கில் அழைத்துக்கொண்டு தான் பணியாற்றும் எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இரவு நேரத்தில் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால் ஏசி அறையில் தனிமையில் இருந்திருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து டிஎஸ்பியிடம் விஷயம் செல்லவே அது பூதாகரமாகியுள்ளது.
இதனையடுத்து, பணி நேரத்தில் ஒழுங்கீனமாகவும் தவறாக நடந்து கொண்டதற்காக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















