திருநங்கை செய்துவந்த மோசமான செயல் : இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

1135

விழுப்புரத்தில்..

பண மோசடி வழக்கில் கைதான திருநங்கை பபிதா ரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் திரு நங்கை பபிதா ரோஸ்.

இவர் திருச்சி மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்த தாரர் முருகேசன் என்பவரிடம் 21 லட்சம் மோசடி செய்த வழக்கில் வளநாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், விசாரணையில் திருநங்கை பபிதா ரோஸ், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், பலரிடம் ஏமாற்றி பணம் பெற்றதாகவும் ஏற்கனவே அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில்,


தற்போது பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து பபிதா ரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு,

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் திருநங்கை பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநங்கை பபிதா ரோசிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.