நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், தமிழில் 1992 ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று அவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாவையும் மிஞ்சிய அழகு என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருவதுடன், பள்ளி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.