நேருக்கு நேர் பைக் மோதியதில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

123

கர்நாடக மாநிலத்தில், நேருக்கு நேராக பைக் மோதி விபத்திற்குள்ளனாதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா – தெல்கூர் சாலையில், ஒரே சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தன.

இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த விபத்துக் குறீத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேடம் போலீசார், 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள், ஹபாலா கிராமத்தில் வசித்து வரும் 20 வயது மல்லிகார்ஜன், சித்து கிஷன் , தெல்கூர் கிராமத்தில் வசித்து வந்த பிரகாஷ் (19), சுரேஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.


ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நான்கு பேரும் உயிரிழந்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் ஹபாலா, தெல்கூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.