பாரிஸ் தாக்குதல்தாரியாக மாறிய மகன் : மகிழ்ச்சியில் பெருமிதம் கொண்ட தந்தை!

504

பிரான்ஸில்…..

பிரான்ஸில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை நடத்திய இளைஞரை அவரது தந்தை பாராட்டியுள்ளார். மேலும் என் மகனுக்கு சிங்கத்தின் இதயமுள்ளது எனவும் கூறியுள்ளார்.

தாக்குதலை நடத்தியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயதான ஜாஹீர் ஹசன் மெஹ்மூத், இவர் ஒரு பயங்கரவாத நிறுவனத்துடனான உறவோடு கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள தனது தந்தையைப் பொறுத்தவரை, அவர் ஒரு “சிறந்த வேலை” செய்தார் என கருதுகிறார்.

பாரிஸிலுள்ள சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகத்திற்கு அண்மையாக கத்திக்குத்து தாக்குதலை இவர் கடந்த வாரம் நடத்தினார்.


அந்த இதழை பழிவாங்குவதாக சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் சூளுரைத்த பின்னர் இந்த தாக்குதல் நடந்தது. செயற்பாடு குறித்து கேட்டபோது, அதற்காக பெருமையடையவதாக கூறியுள்ளார்.

தனது மகனின் செயல்களைப் பாராட்டிய அவர், ஒரு முஸ்லிமாக, சார்லி ஹெப்டோ பத்திரிகை செய்த “அபகீர்த்திக்காக” பழிவாங்கியிருக்க வேண்டும் என்றார்.

“ஜாஹீர் தான் என்ன நினைக்கிறான், திட்டமிடுகிறான் என்பது பற்றி எதையும் எங்களிடம் குறிப்பிடவில்லை. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டியதை அவர் செய்துள்ளார்” என்று அர்ஷத் மஹ்மூத் கூறினார்.

மகன் தனது கையில் சட்டத்தை எடுத்துக்கொள்வது ஒரு நியாயமான நடவடிக்கை என்று அவர் நினைக்கிறாரா என்று நிருபர் அவரிடம் கேட்டபோது, ​​அவர் நிருபரை நோக்கி “நீங்கள் ஒரு முஸ்லீமா? அதாவது நீங்கள் ஒரு சுன்னி முஸ்லீமா? நீங்கள் முஸ்லிமாக இருந்தால் இந்த கேள்வியைக் கேட்க வேண்டாம். இந்த தூஷணிகளைக் கொல்ல தீர்க்கதரிசி அவரை தேர்ந்தெடுத்துள்ளார்” என்றும் அவர் கூறுகிறார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜாகீர் தவிர, அவரது சகோதரனான 16 வயதுடைய ஹசனும் பாரிஸிலேயே வசிக்கிறார். அவர் அண்மையில் பிரான்ஸ் சென்றுள்ளார்.

“ஹசன் சமீபத்தில் அங்கு சென்றார். ஹஸன் எந்தத் தவறும் செய்யாததால் அவரை திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று மெஹ்மூத் கூறினார்.

அவர் தனது இளைய மகனைத் திரும்ப அழைத்து வர முயற்சிக்கையில், மூத்த மகனைப் பற்றி பெருமைப்படுவதாகக் கூறி, “என் மகனுக்கு சிங்கத்தின் இதயம் இருக்கிறது” என்று கூறுகிறார்.