பிறந்தநாள் கொண்டாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் பெற்றோர்!!

596

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் பிறந்த நாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தூர்வாசன், சரத்குமார். இவர்கள் இருவரும் திருத்தணி அருகே மாம்பாக்கம் சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக எதிரே வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தில் மீது மோதியுள்ளது.


இதில் சகோதரர்கள் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.