புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம் : கணவரின் இறப்பு தெரியாமலேயே நெடுதூரம் பயணித்த மனைவி!!

514

இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து, தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி கோவாவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சாய், மாதுரி புதுமணத் தம்பதி சென்றுள்ளனர்.

புதுப்பெண் மாதுரி ரயிலில் இருக்க, சாய் தண்ணீர் போத்தல் வாங்கிவிட்டு ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்துவிட்டார். இதில் பரிதாபமாக அவர் இறந்துவிட்டார்.

ஆனால், கணவர் இறந்தது தெரியாமல் மனைவி மாதுரி மாற்றம் நண்பர்கள் கசேகுடா வரை பயணித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் தகவல் தெரிவித்த பின்னரே கணவர் இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.