வகுப்பறையில் சுருண்டு விழுந்து ஆசிரியை உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்!!

804

திருச்சியில்…

திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி . இவர் புள்ளம்பாடி ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் ஆசிரியைராக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

பள்ளியில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புள்ளம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்கவில்லை.

இதனால் ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் ஆசிரியை அன்னாள் ஜெயமேரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை நடத்திக் கொண்டிருந்தார்.


தேர்வு முடிந்தபின் ஆசிரியை பதிவு செய்த விபரங்கள் செயலியில் இல்லை. அதில் இன்டர்நெட் சரியாக கிடைக்காத்தால் நாட் அசஸ்மென்ட் என தகவல் கிடைத்த காரணத்தால் உடனடியாக் பள்ளியில் சக ஆசிரியர்களிடம் பதட்டத்துடன் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். பேசிக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மற்ற ஆசிரியர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளர்.

பள்ளியில் 22 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்கள் கண் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.