வீட்டின் அருகே விளையாடும் 3 வயதுக் குழந்தை துடிதுடித்து பலியான சோகம்!!

468

தர்மபுரி….

தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே ஜர்க்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்து சரக்கு வாகனம் வந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்பொழுது குழந்தையின் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது.

இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தப்பியோடினார்.


இதுக்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.